திருப்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார் . அவர் பேசும் போது “இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக மாற்றியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் அவனை சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாகவே உருவாக்கி இருக்கிறோம்.