’வைரல் வீடியோ’: நடிகர் மம்மூட்டியின் சாட்டை அடி வசனம் - வீடியோ

செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (11:52 IST)
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டதால், கர்நாடக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


 


மேலும், அங்கு வாழும் தமிழர்களின் மீதும் தமிழர்களின் உடைமைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதனால், அங்கு வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான கார்மேகம் படத்தில் மம்மூட்டியும், வினுசக்ரவர்த்தியும் பேசும் காட்சி ஒன்று காவிரி பிரிச்சனையை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதனால், இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த காட்சி உங்கள் பார்வைக்காக....

வெப்துனியாவைப் படிக்கவும்