தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் போராட்டத்துக்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது. நடிகர்கள், இயக்குனர்களும் போராட்டத்தில் இளைஞர்களுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்காக ஒரு நாள் மௌன போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் கலந்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளையும் அறிவுறுத்துவோம் என தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார்.