இதையடுத்து, பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் பாகுபலி திடையிடப்பட்டுள்ள ரத்னா திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 21 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், மதுரையில் உள்ள தமிழ், ஜெயா என்ற இரண்டு திரையரங்குகளில் பாகுபலி திரையிடப்பட்டுள்ளது. அந்த இரு திரையங்கள் மீது புரட்சிப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் அங்கிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து, குண்டு வீசியவர்கள் மதுரை தள்ளாகுளம் காவல்நிலையத்தில் 7 பேர் சரணடைந்தனர்.