ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவு: தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

செவ்வாய், 28 ஜூலை 2015 (01:34 IST)
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைவு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்