’சென்னையில் பரபரப்பு’ - 9 வயது குழந்தை எப்படி தற்கொலை செய்யும்? - பெற்றோர் கதறல்!

சனி, 8 அக்டோபர் 2016 (12:07 IST)
சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் என்ற மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.


 
 
இப்பள்ளி வளாகத்தின் 2-வது மாடியில் தொடக்க கல்வி வகுப்புகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இங்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லோக மித்ரா, நேற்று பிற்பகல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். 
 
இதை அடுத்து, படுகாயம் அடைந்த மாணவி லோக மித்ரா, அருகே உள்ள SRM மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மாணவி லோக மித்ராவை பார்க்க அவரது தந்தை இளங்கோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாணவி சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.
 
இந்நிலையில், காவல்துறையினர், மாணவியின் பெற்றோரிடம் தங்கள் மகள் தற்கொலை செய்துக்கொண்டதாக எழுதி தர வேண்டும் என நிர்பந்தப்படுதியதாக மாணவியின் பெற்றோர் காவல்துறையினர் மீது புகார் கூறியுள்ளனர்.
 
மேலும், எஸ்ஆர்எம் பள்ளியின் நிறுவனர் கைது செய்யப்படும் வரை மகளின் உடலை வாங்க போவதில்லை என மாணவியின் பெற்றோரும் உறவினரும் கூறியுள்ளனர்.
 
ரெமோ வீடியோ திரைவிமர்சனத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்