அப்துல் காதரிடம் 8 ஆயிரம் அமெரிக்க டாலர் பறிமுதல்

புதன், 25 நவம்பர் 2015 (22:02 IST)
சென்னை விமான நிலையத்தில் அப்துல் காதர் என்ற பயணியிடம் 8 ஆயிரம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

 
சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானப் பயணிகளிடம் வழக்கம் போல் சோதனை நடைபெற்றது. அப்போது மதுரையை சேர்ந்த அப்துல் காதர் என்பவரது உடமைகள் மற்றும் லக்கேஜ்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீசார் சோதனையிட்ட போது, அதில், 8 ஆயிரம் அமெரிக்க டாலர் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த 8 ஆயிரம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து அப்துல் காதரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்