தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ஞாயிறு, 29 நவம்பர் 2015 (13:05 IST)
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.


 

 
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்னர்.
 
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்தனர். மேலும் அவர்களின் மீன்பிடி சாதனங்களையும் அவர்கள் சேதப்படித்தியதாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில், இலங்கை கடற்படையினர் விரட்டிதியல் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது. அதனால் தத்தளி்த்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 
சில தினங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். மேலும் அவர்களின் 3 விசைப்படகுகளையும் கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்