இந்த அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், இந்த தற்காலிக அங்கீகாரம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். இதன் மூலம் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாகிறது. இதனால் 5.12 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.