7ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை கற்பழித்து கொன்று வீசிய இருவர் கைது
சனி, 22 டிசம்பர் 2012 (12:52 IST)
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு முட்புதரில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ வைகுண்டம் வட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்தவர் மாணவி புனிதா (13). தாதன்குளத்தை சேர்ந்த புனிதா, பக்கத்து ஊரான செய்துங்கநல்லூரில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். புனிதாவும் அவருடன் படிக்கும் வேறு நான்கு சிறுமிகளும் எப்போதும் ஒன்றாகவே நடந்து பள்ளிக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் அவரது சடலம் நேற்று காலை ரயில்வே பாலம் அருகில் இருக்கும் முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பிரேதத்தை கைப்பற்றி செய்துங்கநல்லூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவியை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மாணவி ஒருவர் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடுமை சம்பவம் மறைவதற்குள் தமிழகத்தில் மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.