சென்னைக்கு இன்று வரும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள்!

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:28 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போராட்டம் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைவருக்கும் ஒரு தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக ஏற்கனவே மத்திய அரசிடம் தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அடுத்து புனேயில் இருந்து இன்று 6 லட்சம் தடுப்பூசி மருந்துகள் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
6 லட்சம் தடுப்பூசி மருந்து இன்று சென்னை கொண்டுவரப்பட உள்ளதாகவும் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் இந்த தடுப்பூசிகள் வைக்கப்பட்டு பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மத்திய அரசிடமிருந்து 15 லட்சம் ஒதுக்கீடு கோவிஷீட்ல் தடுப்பூசி டோஸ்கள் கோரப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆறு லட்சம் தடுப்பூசி டோஸ்கள் சென்னைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்