கரூர் பேருந்து நிலையத்திலும் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் ஆறு சிறுமிகளை அழைத்து சென்றதை பார்த்த போலீஸார் அவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளைஞரின் பெயர் குமரேஷன் என்றும் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி என்ற ஊரைச் சார்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் தஞ்சை மாவட்டம், பேராவூரணி சுற்றுவட்ட கிராமங்களை சார்ந்த மகாலட்சுமி (வயது 16), அவர்களது தங்கை திலகவதி (வயது 15), அவருக்கு அடுத்த தங்கை மாரியம்மாள் (வயது 14), மேலும் அதே போல பரமேஸ்வரி (வயது 15), அவரது தங்கை ரேணுகா (வயது 13), மற்றும் சந்தியா (வயது 16) என்றும் இவர்களை கரூர் சின்னாண்டாங்கோயில் சாலையில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் வேலைபார்ப்பதற்காகவும், இந்த குமரேஷன் என்ற இளைஞர் புரோக்கராக செயல்பட்டதும் தெரியவந்தது.