தமிழகத்தில் இன்று மேலும் 5,697 பேர் கொரொனாவால் பாதிப்பு ! 68 பேர் உயிரிழப்பு

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (18:32 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,14,208 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரொனாவா தொற்று பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,58,300 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் 78,190 பேர் பரிசோதிகப்பட்டனர்.

இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால்  68  பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8434 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 5735  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,53,165 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 989 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மொத்தம் 1,50,572 பேராக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்