கடையநல்லூரில் வேன் மோதி 4 இளைஞர்கள் பலி

திங்கள், 27 ஜூன் 2016 (11:41 IST)
கடையநல்லூர் அருகே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் வேனில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.


 

 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரையைச் சேர்ந்த சிராஜூதீன், ஷேக், ஆகியோர் பைக்கில் சொக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த முத்துநாரயணசாமி, மகாராஜன் ஆகியோரும் பைக்கில் சென்றுள்ளனர்.
 
சாலையில் செல்லும் போது இருதரப்பினருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு சாலையில் முன்னும் பின்னுமாக வேகமாக சென்றுள்ளனர். சாலையில் எதிரே சுற்றுலா பயணிகளோடு வேன் ஒன்று வந்துள்ளது.
 
இவர்களின் சேட்டையால் வேன் டிரைவர் செய்வதறியாது வேனை திருப்ப முயன்றபோது, வேன் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. வேன் கவிழ்ந்தவுடன் இரு பைக்குகலும் சென்று வேன் மீது மோதியுள்ளது. அதில் பைக்கில் சென்ற 4 இளைஞர்களும் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்