இதையடுத்து தமிழ்நாடு கணினி வழி குற்றப்பிரிவு போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், யுடியூப்பில் ஆபாச படம் பதிவேற்றம் செய்தது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருண்பாபு என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அருண்பாபு மீது சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், காவல் துறையினர் குற்றப்பத்ரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அருண்பாபுக்கு 4 வாரம் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.