பக்தர்கள் பலர் குளத்தின் கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து கொண்டு இருந்தனர். குளத்தின் இன்னொரு பகுதியில் சாமி சிலைகளை கொண்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் பொதுமக்கள் குளத்தில் விழுந்தனர். தீர்த்தவாரி நடத்திய குருக்கள் மீதும் பக்தர்கள் விழுந்தனர். இதனால் குருக்கள் உள்பட பலர் குளத்தில் மூழ்கினர்.