இந்த நிலையில், மதிமுகவைச் சேர்ந்த, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், நெல்லை புறநகர் பகுதி மாவட்டச் செயலாளர் சரவணன், நெல்லை மாவட்டச் செயலாளர் பெருமாள், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.