3 குழ‌ந்தைகளை எ‌ரி‌த்து தா‌ய் த‌ற்கொலை!

சனி, 15 நவம்பர் 2008 (15:03 IST)
திருவ‌ள்ளூ‌ரமாவ‌ட்ட‌ம் பேர‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் கணவ‌னி‌ன் தவறான நட‌த்தை‌க் காரணமாக வா‌ழ்‌க்கை‌யி‌ல் ‌வி‌ர‌க்‌‌தியடை‌ந்த இ‌ள‌ம்பெ‌ண் தனது மூ‌ன்று குழ‌ந்தைகளு‌க்கு‌ம் ‌தீவை‌த்து‌ தானு‌ம் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

பேரம்பாக்கத்தை அடுத்த கூவம் புதிய காலனி கங்கையம்மன் கோவில் தெருவை‌ச் சே‌ர்‌ந்தவர‌் மனோகரன். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சந்தோஷ் (வயது 3), டெய்சி ராணி (2), மற்றும் தயாநிதி (6 மாதம்) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.

மனோகரனுக்கும் அதே ஊரை சேர்ந்த ம‌ற்றொரு பெ‌ண்ணு‌க்கும் இடையே கள்ள‌த் தொடர்பு இருந்து வந்ததாக தெ‌ரி‌கிறது. இதையடு‌த்து இ‌ந்த தொடர்பை விட்டு விடும்படி பொற்கொடி பலமுறை தனது கணவ‌ரிட‌ம் எடு‌த்து‌க் கூறியும் அவ‌ர் கேட்காததால் மனவருத்தம் அடைந்தா‌ர்.
இ‌ந்‌நிலை‌யி‌ல், வா‌‌ழ்‌க்கை‌யி‌ல் ‌விர‌க்‌‌தி அடை‌ந்த அவர் ச‌ம்பவ‌த்‌தன்று வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தன்னுடைய 3 குழந்தைகளையும் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவ‌ர்களது உட‌ல் மு‌ற்‌றிலு‌ம் எ‌ரி‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக ‌திருவ‌ள்ளூ‌ர் அரசு மரு‌த்துவமனை‌க்கு அ‌னு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த ச‌ம்பவ‌ம் நட‌‌ந்த போது அவ‌ரது கணவ‌ன் ‌வீ‌ட்டி‌ல் இ‌ல்லை எ‌ன்று கூ‌ற‌ப்படு‌கிறது.

குழ‌ந்தை‌களு‌க்கு ‌‌தீவை‌த்து தாயு‌ம் த‌ற்கொலை ச‌ெ‌ய்து கொ‌ண்ட இ‌‌ந்த ‌நிக‌ழ்வு அ‌ப்பகு‌தி ம‌க்க‌ளி‌ட‌ம் பெரு‌ம் சோக‌த்தை ஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது. இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌தி‌ந்து மனோகரனை கைது செ‌ய்து ‌விசா‌ரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்