3வது நாளாக ‌‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:41 IST)
தமிழக மீனவர்கள் இல‌ங்கை கடற்படையினரால் கைது செய்ய‌ப்படுவதையும், தாக்க‌ப்படுவதையு‌ம் ம‌த்‌திய- ம‌ா‌நில அரசுக‌ள் தடு‌த்து ‌நிறு‌த்த‌க் கோ‌ரி த‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் 3வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

அ‌ந்த போரா‌ட்ட‌‌த்தா‌ல் தஞ்சாவூ‌ர் மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திர‌ ‌மீனவ‌ர்க‌ள் ‌கடலு‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை.

க‌ச்ச‌த் ‌‌தீவு அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போது கட‌ந்த 22ஆ‌‌ம் தே‌தி ம‌ல்‌‌லிபட்டின‌த்தை 22 ‌மீனவ‌ர்களை இல‌ங்கை க‌ட‌ற்படை‌யின‌ர் ‌‌பிடி‌த்து‌ச் செ‌ன்றன‌ர் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்