தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 29 பேர் குணமடைந்துள்ளனர்..

சனி, 2 மே 2020 (21:50 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்  மொத்தமாக கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 29 பேர் குணமடைந்துள்ளனர்.

எனவே,  தமிழகத்தில் இதுவரை  கொரோனாவிலிருந்து 1,341 பேர் மீண்டுள்ளனர்.


தமிழகத்தில் இன்று மட்டும் 10,127 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1,39,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்