தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது

வியாழன், 5 மார்ச் 2015 (11:54 IST)
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை தொடங்கியது. 
 
நடப்புக் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த ஆண்டு முதல், மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட விடைத்தாள் பக்கங்கள் வழங்கப்படுகின்றன.
 
தேர்வின்போது, மோசடியில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்