லாட்ஜில் 19 வயது மாணவனும், திருமணமான பெண்ணும்: எச்சரித்து அனுப்பியது போலீஸ்!

ஞாயிறு, 27 நவம்பர் 2016 (12:02 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவனும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான திருமணமான பெண்ணும் தலைமறைவாகினர். இவர்கள் செங்கல்பட்டு லாட்ஜில் பிடிபட்டதாக கூறப்படுகிறது.


 
 
கல்லூரிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பாததால் அவனது பெற்றோருக்கு சந்தேகம் வர அவர்கள் திருமணமான குறிப்பிட்ட அந்த பெண்ணுடன் தங்கள் மகன் சென்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தனர். அந்த பெண் இதுவரை மூன்று பேரை திருமணம் செய்துள்ளார்.
 
இதனையடுத்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு அவர்கள் இருவரும் செங்கல்பட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸ் அவர்களை மடக்கி பிடித்தனர்.
 
பின்னர் காவல் துறை அந்த மாணவனிடம் நடத்திய விசாரணையில், தான் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் அப்போது அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து பேசி பழகி நெருக்கம் ஏற்பட இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளான் அந்த மாணவன்.
 
மேலும் கல்லூரி செல்வதாக கூறி பகல் நேரங்களில் அந்த பெண்ணுடன் அவருடைய வீட்டில் தான் இருந்து வந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் மாணவனை பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்