18 வயது இளம்பெண் தீக்குளிப்பு: வாலிபர் காதலிக்க மறுத்ததால் விபரீதம்

செவ்வாய், 5 ஜனவரி 2016 (13:07 IST)
நாகர்கோவில் பகுதியில் சோனாலி என்ற 18 வயது பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபர் சோனாலியை காதலிக்க மறுத்ததால் நேற்று இரவு மனமுடைந்த சோனாலி தீக்குளித்துளார்.
 
18 வயதான சோனாலி பள்ளி இடைநிலை கல்வியுடன் நிறுத்திவிட்டு பெற்றோருக்கு துணையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபருடன் சோனாலிக்கு பழக்கம் எற்பட்டுள்ளது.
 
சோனாலியும் அந்த வாலிபரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்கள் தொடர்பை நீட்டித்து வந்துள்ளனர். சோனாலி மற்றும் வாலிபரின் பேச்சு வரம்பு மீறி போக சோனாலி அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
 
தான் காதலிப்பதை சோனாலி அந்த வாலிபரிடம் சொல்ல அந்த வாலிபர் காதலை ஏற்றுக்கொள்ளமல் காதலிக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சோனாலி நேற்று இரவு குளியலறையில் சென்று கதவை பூட்டிக்கொண்டு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார்.
 
சோனாலியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த சம்பவம் குறித்து சோனாலியிடம் காவல் துறையினர் மருத்துவமனையில் விசாரித்தனர். இதில் சோனாலியுடன் பேசிய வாலிபர் அவரை பிடிக்கவில்லை என கூறியதும் இதனால் மனம் உடைந்தே சோனாலி தீக்குளித்ததும் தெரியவந்தது. பின்னர் மாஜிஸ்திரேட்டு மருத்துவமனையில் நேரில் சென்று சோனாலியிடம் வாக்குமூலம் பெற்றார்.
 
இதனையடுத்து அந்த வாலிபர் யார் என கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்த காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்