புதுச்சேரி சட்டப் பேரவை வரும் 15ஆம் தேதி மீண்டும் கூடுகிறது என்று சட்டப் பேரவைச் செயலர் சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி தொடங்கிய புதுச்சேரி சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் உரையாற்றினார். அக் கூட்டத் தொடர் 4ஆம் தேதி வரை நடந்தது.
அன்றைய தினம் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுவதாக இருந்தது. நேரம் போதாதக் காரணத்தால் அந்த நிகழ்ச்சியை அன்றைய தினம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தேதி குறிப்பிட்டாமல் சட்டப் பேரவையைத் தள்ளிவைத்தார் பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன்.
இப்போது 15ஆம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் பேரவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பேசுவார்கள் என்று தெரிகிறது.
அதன் பிறகு அமைச்சர்கள், முதமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பதில் அளிப்பார்கள். நிறைவாக பேரவைத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவிப்பார் என்று தெரிகிறது.