12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு! – வாட்ஸ் அப் மூலம் நடத்த ஏற்பாடு!

புதன், 19 மே 2021 (15:52 IST)
தமிழகத்தில் நடப்பு ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதற்கான அலகு தேர்வு குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில் மே 3 முதலாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வு நடப்பதற்கு 15 நாட்கள் முன்னதாக தேர்வு அட்டவணை வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்தும் அலகு தேர்வை வாட்ஸ் அப் மூலமாக நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு மாணவர்களுக்கென தனி வாட்ஸ் அப் குழுக்களை தொடங்கவும், மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்