தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் எடுக்க முடியாது என்ற விரக்தியில் சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
தனது பெற்றோருக்கு அவள் எழுதிய கடிதத்தில், கணிதத்தில் தன்னால் முழு மதிப்பெண் பெற முடியாது என்பதால், தான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பெற்றோருக்குக் கூறியுள்ளார். இந்த மாணவி 10-ஆம் வகுப்பு தேர்வில் 500-க்கு 462 மதிப்பெண் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.