சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் எழும்பூரிலிருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி பியர்ல் சிட்டி உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், செங்கோட்டை செல்லக்கூடிய பொதிகை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி செல்லக்கூடிய மன்னை எக்ஸ்பிரஸ், திருச்சி செல்லக்கூடிய ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் செல்லக்கூடிய உழவன் எக்ஸ்பிரஸ் சேலம் எக்ஸ்பிரஸ், காரைக்குடி எக்ஸ்பிரஸ், ஆகிய 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குரோம்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை உள்ள ரயில் தண்டவாளம் தெரியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் பல்லாவரம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன.