ஓபிஎஸ் ராஜினாமா சர்ச்சை, சசிகலா முதல்வராக எதிர்ப்பு, அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றது, புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது என பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் தமிழக அரசிய களம் தற்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.
இதனால் 230 உறுப்பினர்களில் பெரும்பான்மை மதிப்பு என்பது 116 என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறப்பட்டுகிறது. இதனால் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு அவருக்கு அதிகமாகவே உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் என்ன மனநிலையில் வாக்களிக்க உள்ளார்கள் என்பதிலேயே உண்மையான முடிவு இருக்கும்.