இதனையடுத்து மாணவன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவனின் புகாரில் இரவில் வீட்டில் தனியாக இருந்த தன்னிடம் ஆசை வார்த்தைகளை கூறி வலுக்கட்டாயமாக அந்த பெண் உடலுறவு கொண்டதாகவும், அதனால் தற்போது குழந்தை பிறந்துள்ளதாகவும், இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வற்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
ஆய்வாளர் சுகுணா, குழந்தை ஒன்றின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பாலியல் தாக்குதல், கடும் பாலியல் தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் குழந்தை, தாய் மற்றும் மாணவனுக்கு மருத்துவபரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.