இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த 104 மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட அவர்களின் 66 படகுகளையும் உடனே விடுவிக்க உயர்மட்ட அளவில் தலையிட்டு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இலங்கையை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகிறார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வரும் 10 ஆம் தேதி இலங்கை செல்லவுள்ளார். அப்போது அவர் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நேரில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக மீனவர்கள் விடுதலைக்கு உள்ள தடைகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.