1032 ‌வி‌ரிவுரையாள‌ர்களு‌க்கு பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்

புதன், 8 ஜூலை 2009 (16:15 IST)
1,032 ‌க‌ல்லூ‌ரி வி‌ரிவுரையாள‌ர்களு‌க்கப‌ணி ‌நியமஆணையமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றவழ‌ங்‌கினா‌ர்.

TN.Gov.TNG
தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆ‌சி‌ரிய‌ரபணி இடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரிவுரையாளர்கள் 1032 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று காலை நடந்தது. விழாவுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலை வகித்தார். விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு 1032 வி‌ரிவுரையாள‌ர்களு‌க்கு பணி நியமன ஆணை வழங்கினார்.