சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராவதை நாங்கள் விரும்பவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக மாற்றம் என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி அதில், ஜனாதிபதி தலையிட்டு தமிழக அரசை கலைக்க வேண்டும். சசிகலா முதல்வராக பதவி ஏற்பதை தடுக்க வேண்டும் என்று பதிவிட்டனர். அதில் தற்போதைய முதல்வர் பன்னீர் செல்வமே தொடர்ந்து முதலமைச்சர் நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.