விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது வழக்குப் பதிவு
ஞாயிறு, 2 அக்டோபர் 2011 (11:32 IST)
தேர்தல் விதி மீறல் தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க.வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பிரசாரத்துக்குச் சென்றுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த கட்டுப்பாடுகளை மீறியதால் பிரேமலதா உள்பட தே.மு.தி.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.