‌பி.இ. மாணவ‌ர்க‌‌ளி‌ன் உ‌யிரை ப‌‌றி‌த்த மது

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2012 (12:15 IST)
வேலூ‌ர் மாவ‌ட்ட‌ம் காட்பாடியில் லாரி மீது கார் மோ‌திய ‌விப‌த்‌தி‌ல் பொ‌றி‌யி‌ய‌ல் மாணவ‌ர்க‌ள் 3 பே‌ர் ச‌ம்பவ இட‌த்‌திலேயே உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். கா‌ரி‌ல் பயண‌ம் செ‌ய்த மாணவ‌ர்க‌ள் மது அரு‌ந்‌‌தி இரு‌‌‌க்கலா‌ம் எ‌ன்று காவ‌ல்துறை ச‌ந்தேக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வேலூரில் உள்ள தனியார் பொ‌றி‌‌யி‌ய‌ல் கல்லூரியில் பி.டெக். இறுதியாண்டு படி‌த்து வ‌ந்த ஆந்திராவை சேர்ந்த மாருதி பிரசாத், தணு தத்தா ரெட்டி, குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்கிற கொலம்பி, மணிவண்ணன், ஜெய்சங்கர் ஆகியோ‌ர் விடுமுறை முடிந்து காரில் கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

வேலூர் மாவட்ட‌ம் காட்பாடி - சித்தூர் பேரு‌ந்து ‌நிறு‌த்த‌ம் அருகே அ‌திகாலை 4 ம‌ணி‌க்கு அவ‌ர்க‌ளி‌ன் கா‌ர் மு‌ன்னா‌‌ல் செ‌ன்ற லாரியை முந்திச் செல்ல முயன்றது. அ‌ப்போது லாரி மீது கா‌ர் பயங்கரமாக மோதியது.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் மாணவ‌ர்க‌ள் மாருதி பிரசாத், தணு தத்தா ராஜேஷ் ஆகியோ‌ர் உட‌ல் நசு‌ங்‌‌கி ச‌ம்பவ இட‌த்த‌ி‌லேயே ப‌லியானா‌ர்க‌ள். படுகாய‌ம் அட‌ந்த மணிவண்ணன், ஜெய்சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவ‌ர்க‌ள் 5 பேரு‌ம் மது அருந்திவிட்டு கா‌ரி‌ல் பயண‌ம் செ‌ய்ததாக காவ‌ல்துறை ச‌ந்தே‌கி‌க்‌கிறது. இது கு‌றி‌த்து கா‌ட்டிபாடி போ‌லீசா‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்