பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு: தமிழ் வெப்துனியா இணையதளத்தில் காணலாம்.
ஞாயிறு, 8 மே 2011 (17:39 IST)
பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.இதனை தமிழ் வெப்துனியா இணையதளத்தில் காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 25 ம் தேதியுடன் முடிவடைந்தது.
சுமார் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வுகளை முடிவுகளை தமிழக அரசு இணையதளங்களில் வெளியிட உள்ளது.
tamil.webdunia.com இணைய தளத்திலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 25 ஆம் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும் என்றும், தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.