கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக வைகோவுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக உள்ளேன் என்றும் அவர் தயாரா என்று அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மதுரை கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக பத்திரிகைகள், ஊடகங்கள் சரியான நிலையைக் கையாளவில்லை என்றும் அவை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக, பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வருகின்றன என்றும் கூறினார்.
இந்த விஷயத்தில் வைகோ அரசியல் செய்து வருகிறார் என்று குற்றம்சாற்றிய சேதுராமன், கூடங்குளம் திட்டத்தால் தென் மாவட்டங்களில் வளர்ச்சி ஏற்படும். வேலைவாய்ப்பு கூடும். அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், தேவையற்ற வீண் வதந்திகளை நம்பி மக்களை போராட்டத்துக்குத் தூண்டி வேடிக்கை பார்ப்பது நாட்டு நலனுக்கே கேடு என்றார்.
கூடங்களம் பிரச்சனையில் வைகோவுடன் நான் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக உள்ளேன் என்றும் அவர் தயாரா? என்றும் சேதுராமன் சவால் விடுத்தார்.