வேலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செவ்வாய், 17 நவம்பர் 2015 (01:14 IST)
வேலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக, வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால்,  பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையில், பொன்னையாற்றின் கரையோரம் வசிப்போர்  பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்