லஞ்சம் வாங்க மாட்டேன், கட்ட பஞ்சாயத்து செய்ய மாட்டேன், அடுத்தவர்கள் சொத்தை அபகரிக்க மாட்டேன் என்று பெருந்துறை ஒன்றிய பகுதி வாக்காளர்களிடம் உறுதி அளித்து வாக்கு சேகரித்தார் திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
பெருந்துறை ஒன்றியத்திற்கு உள்பட்ட பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், பள்ளபாளையம், காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி ஆகிய பேரூராட்சிகள், சிங்காநல்லூர், திங்களூர், வெட்டையன்கிணறு, துடுப்பதி, சுள்ளிபாளையம், சீனாபுரம், பட்டக்காரன்பாளையம், பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, விஜயமங்கலம் ஆகிய ஊராட்சிகள் உள்பட 60 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.