ரெட்டி உடலுக்கு ஆற்காடு வீராசாமி- கனிமொழி அஞ்சலி

வியாழன், 3 செப்டம்பர் 2009 (20:27 IST)
சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் நாளை ஹைதராபாத் செல்கிறார்கள்.

வெள்ளியன்று காலை 8.20 மணிக்கு விமானம் முலம் ஹைதராபாத் செல்லும் அவர்கள், ராஜசேகர ரெட்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்