வேலூர் ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக குடியிருப்புப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செல்போனுடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அது செயல் இழக்கச் செய்யப்பட்டது.