மூ.மு.கழக மாவ‌ட்ட செயல‌ர் வெட்டி‌க்கொலை

செவ்வாய், 14 ஜூலை 2009 (12:59 IST)
திருநெல்வேலி மாவ‌ட்ட மூவேந்தரமுன்னணி கழக செயல‌ரை இ‌ன்று காலை அடையாள‌ம் தெ‌ரியாத ம‌ர்ம கு‌ம்ப‌ல் படுகொலை செ‌ய்தது.

திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌ம் மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் பகுதியை சேர்ந்தவ‌ர் சிவசாமி‌த்தேவ‌ர் (45). இவர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழக மாநகர் மாவட்ட செயலராகவும், தென்மண்டல அமைப்பு செயலராகவும் பணியாற்றி வந்தார்.

இன்று காலை மேலப்பாளையம் இரயில்வே கேட் அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாள‌ம் தெ‌ரியாத கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இத‌ி‌ல் சிவசாமி‌த் தே‌வ‌ர் ‌நிக‌ழ்‌விடத்திலேயே உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

இது குறித்து காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குபபதிவசெய்தவிசாரணை நட‌த்‌தி வருகின்றனர். மேலுமஅசம்பாவிதம் ‌நிகழாம‌ல் இருக்க காவ‌ல‌ர்க‌ள் பாதுகாப்பபணியிலஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்