முதல்வர் செல்லும் கார், ஹெலிகாப்டரையும் சோதனை செய்யவேண்டும் - போலீசாரிடம் வைகோ!

வெள்ளி, 28 மார்ச் 2014 (14:19 IST)
மதிமுக பொதுச் செயலர் வைகோ-வின் காரை மதுரையில் உள்ள திருமங்கலம் அருகே போலீசார் சோதனையிட்டனர்.
 
வைகோ இன்று திருமங்கலத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
 
திருமங்கலத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
காரிலிருந்து இறங்கிய வைகோ, கார் டிக்கியை திறந்து காண்பித்து எனது பெட்டி, உடமைகள் அனைத்தையும் சோதனை செய்துகொள்ளுங்கள்.
 
இதேபோல் முதல் அமைச்சர் ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்டர், கார் மற்றும் அவருடைய கூட்டங்களுக்கு அணிவகுத்து செல்லும் வாகனங்களையும் சோதனை செய்யவேண்டும் என்று போலீசாரிடம் வைகோ கேட்டுக் கொண்டாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்