மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு: வாசன் கண்டனம்

சனி, 18 பிப்ரவரி 2012 (17:09 IST)
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இத்தாலி கப்பல் ஊழியர்கள் இந்திய மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்