மாணவர்களின் கல்வி உதவித் தொகை சுருட்டிய 81 தலைமையாசிரியர்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1850 ரூபாய் தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
கல்வித்தொகை வழங்குவதில் முறைகேடு செய்த ஏற்கனவே தலைமையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 தலைமையாசிரியர்கள் தலைமறைவானார்கள். அவர்களை காவல்துறை தேடி வருகிறது.