நேற்று நள்ளிரவு 12 மணியளவில் செல்வராஜ் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் செல்வராஜ் வீட்டில் படுத்து தூங்க சென்றார். மகனின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த ராஜாம்மாள் வீட்டின் வெளியே கிடந்த பெரிய கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த மகன் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார்.