போக்குவரத்துக் கழக தேர்தலில் தொ.மு.ச.வெற்றி

ஞாயிறு, 28 நவம்பர் 2010 (14:35 IST)
தமிழக அரசு போக்கு வரத்து கழக ஊழியர்களுக்கான பதவி உயர்வு, சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கான சங்கத்தை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தொ.மு.ச. வெற்றி பெற்றது.

கடந்த 25-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 240 பஸ் டெப்போக்களில் தொழிலாளர்கள் வாக்களித்தனர். மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதில் 95 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற தொமுச, கம்யூ.கட்சி ஆதரவு பெற்ற சி.ஐ.டியூ.சி., அதிமுகஆதரவு பெற்ற சங்கங்கள் உட்பட 13 சங்கங்கள் கலந்து கொண்டன.

இதன்முடிவுகள் சென்னையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி தொமுச 73ஆயிரத்து 450 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து கம்யூ., அதிமுக ஆதரவு தொழிற்சங்கங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்