பொறியியல் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

ஞாயிறு, 1 மே 2011 (10:33 IST)
ஏஐஇஇஇ எனப்படும் அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதிலும் உள்ள 80 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது.

இதில் சென்னை உள்ளிட்ட சில மையங்களில் மட்டும் கேள்வித்தாள் மாறியது தெரிய வந்துள்ளது. இதனால் கேள்வித்தாள் மாறிய மையங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணிக்கு துவங்குவதாக இருந்த தேர்வுகள் தற்போது 12 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஏஐஇஇஇ தேர்வுகளை இன்று நாடு முழுவதிலும் உள்ள 12 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் என்பத குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்