திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியை சீரமைக்க ரூ.10.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறினார்.
சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் ராமலிங்கம் இன்று தாக்கல் செய்தார். அதில், புழல் ஏரியின் உபரி நீர், வடிகாலின் மொத்த நீளம் 8.30 கி.மீ ஆகும்.
இந்த ஏரியின் மதகு மற்றும் கரைகளை சீரமைத்து ஏரியை பலப்படுத்த ரூ.10 கோடியே 56 லட்சத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதேபோல் உபரிநீர் வடிகாலையும் புனரமைக்கப்படும்.
இதன்படி 4 உயர் மட்ட பாலங்கள் மற்றும் வடிகால் புனரமைக்கப்படும். கும்மிடிப்பூண்டி அருகே தேர்வை கண்டிகையில் ரூ.330 கோடியில் புதிய ஏரி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடியில் தடுப்பணை அமைக்கும் ஏற்பாடு நடந்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.