பா.ஜனதா தனித்து போட்டியிடும்-பொன்.ராதாகிருஷ்ணன்

ஞாயிறு, 3 அக்டோபர் 2010 (11:53 IST)
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடும் என்று அதன் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"சட்டசபை தேர்தலை சந்திக்க கட்சியை தயார் படுத்தி வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் கமிட்டி, சட்டமன்ற தொகுதி தேர்தல் குழு அமைக்கப்பட்டு வருகிறது.

கூட்டணி பற்றி இப் போது சிந்திக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது எதுவும் நடக்கலாம். தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறோம். அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிட வேண்டும் என்பதே பெரும் பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. இருப்பினும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பது எங்கள் விருப்பம்." என்று கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.

வெப்துனியாவைப் படிக்கவும்