பாபநாசம் அருகே ‌மி‌ன் பேரு‌ந்து- லா‌ரி நேரு‌க்கு நே‌ர் மோத‌ல்: 4 பேர் ப‌லி!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:42 IST)
பாபநாச‌ம் அருகே ‌மி‌னி பேரு‌ந்து‌ம் லா‌ரியு‌‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌தி‌க் கொ‌ண்ட ‌வி‌ப‌த்த‌ி‌ல் 4 பே‌ர் உ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர்.

அரியலூர் மாவட்டம், ஒ‌வியூர் கிராமத்தில் இருந்து ஒரு லாரியில் 20க்கும் மேற்பட்டவர்கள் பாபநாசம் அருகே உள்ள ஓடுவனூர் என்ற ஊரில் நடக்கும் திருமண விழாவுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

பாபநாசம் அருகே உள்ள மேட்டு தெரு ஆறுக்கண் மதகுரோடு அருகே லா‌ரி சென்ற போது, எ‌திரே வ‌ந்த மினி பேரு‌ந்துட‌ன் லாரி நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் லா‌ரி‌யி‌‌ல் இரு‌ந்த 4 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரு‌ம் தஞ்சாவூ‌ர் ரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்